Home இலங்கை அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை!- அரசுக்குச் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை!- அரசுக்குச் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

0
image

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனச் சட்டமா அதிபர் திணைக்களம் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், 22ஆவது திருத்தச் சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது என்றே அரசு  உறுதியாக நம்புகின்றது. சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்ற சட்ட விளக்கத்தையே சட்டமா அதிபர் திணைக்களம் எமக்கு வழங்கியுள்ளது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசு என்ன செய்யும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமையவே அரசின் இறுதி முடிவுகள் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/no-referendum-required-for-the-22nd-amendment-to-the-constitution-1788056752

NO COMMENTS

Exit mobile version