Home இலங்கை கட்டுநாயக்கவில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் தப்பியோட்டம்

கட்டுநாயக்கவில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் தப்பியோட்டம்

0
image

கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இன்று (15) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/shooting-at-a-police-officer-in-kattunayakkan–two-escape-1784117790

NO COMMENTS

Exit mobile version