Home இலங்கை கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

0
image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த  28 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அதே தொழிற்சாலையில் வான் சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று  நண்பகல் வேளையில், தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பார்த்து, குறித்த பேருந்துக்குள் ஏறித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குலதுங்கவின் பணிப்புரையின் பேரில், சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுரவீரவின் மேற்பார்வையில் பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Source: https://samugammedia.com/a-young-driver-made-a-tragic-decision-on-the-kattunayakkan-textile-factory-bus-1785473966

NO COMMENTS

Exit mobile version