காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M. காந்தவல நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய S.M. காந்தவல, தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/new-officer-in-charge-for-kankesanthurai-police-station-1789095419
