Home இலங்கை காணாமல் போன ஆட்கள் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல்!

காணாமல் போன ஆட்கள் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல்!

0
image

தேசிய நல்லிணக்கம் ,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், செ.திலகநாதன்,  மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன்  காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த ,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ,பொது அமைப்பு சார்ந்தோர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/clarifying-discussion-regarding-missing-persons-1781863047

NO COMMENTS

Exit mobile version