நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (15) டெங்கு ஒழிப்பு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். அஜீத் தலைமையில், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது, டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
Source: https://samugammedia.com/national-dengue-eradication-programme-in-kinniya-1789473584
