Home இலங்கை கொழும்பில் பட்டப்பகலில் பயங்கரம் – 6 கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் கொள்ளை

கொழும்பில் பட்டப்பகலில் பயங்கரம் – 6 கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் கொள்ளை

0
image

கொழும்பு  – தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையமொன்றில் புகுந்த நான்கு பேர், அங்கிருந்த பெருந்தொகையான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர்கள் நான்கு பேரும் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனமொன்றில் குறித்த பயண முகவர் நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/horror-in-colombo-in-broad-daylight–60-million-rupees-and-gold-jewelry-stolen-1788322522

NO COMMENTS

Exit mobile version