Home இலங்கை சுட்டெரிக்கும் வெயில்- 7 மாவட்டங்களுக்கு ‘வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

சுட்டெரிக்கும் வெயில்- 7 மாவட்டங்களுக்கு ‘வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

0
image

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிறப்பு வெப்பமான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (வெப்பச் சுட்டெண்) கணிசமாக அதிகரிக்கும் என்றும், இது பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய ‘எச்சரிக்கை மட்டத்தில்’ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் பருகி உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.

நண்பகல் வேளைகளில் நேரடியாகச் சூரிய ஒளியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிப்புற தொழிலாளர்கள் அதிக கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Source: https://samugammedia.com/scorching-heat–department-of-meteorology-issues-e-1786543660

NO COMMENTS

Exit mobile version