Home இலங்கை திருகோணமலையில் ஓவியக் கண்காட்சி!

திருகோணமலையில் ஓவியக் கண்காட்சி!

0
image

கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி வெள்ளி, சனி ஆகிய தினங்களில் திருகோணமலை ஜுபிலி மண்டபத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை இடம்பெற்றது. 

குறித்த கண்காட்சியில் ஏ.எஸ்.பி சித்திரக் கலைக்கூடத்தில் சித்திரக்கலை பயிலும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான அழகிய, தத்துரூபமான பல ஓவியங்களும், கலைக்கூடத்தின் ஆசிரியர் சுதர்சன் மர வேர்களை பயன்படுத்தி இயற்கையாக உருவாக்கிய கருத்துகள்மிக்க உருவங்களும், காலம்சென்ற சித்திர ஆசிரியர் பாஸ்கரன் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

Source: https://samugammedia.com/painting-exhibition-in-trincomalee-1781346378

NO COMMENTS

Exit mobile version