Home இலங்கை நல்லூரான் மாம்பழத் திருவிழா; தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான்

நல்லூரான் மாம்பழத் திருவிழா; தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான்

0
image

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான தண்டாயுதபாணி உற்சவம் இன்று (07) சிறப்பாக நடைபெறுகிறது.

மாம்பழத் திருவிழா என அழைக்கப்படும் இவ்வுற்சவத்தில், தண்டாயுதபாணி கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார். 

இன்றைய காலை உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ள நிலையில், மாலை ஒருமுகத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். 

Source: https://samugammedia.com/nallur-mango-fruit-festival-lord-murugan-blessed-in-the-thandayuthapani-form-1788766482

NO COMMENTS

Exit mobile version