Home இலங்கை நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்: நீர் வழங்கல் சபை அவசர அறிவிப்பு!

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்: நீர் வழங்கல் சபை அவசர அறிவிப்பு!

0
image

கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசியமான பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், நாளை (04.08.2026) நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (03.08.2026) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பராமரிப்புப் பணிகள் காரணமாக குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் தற்காலிக அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

எனவே, குறிப்பிட்ட காலப்பகுதியில் பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல், மிகவும் சிக்கனமான முறையில் சேமித்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: https://samugammedia.com/water-supply-suspension-in-several-areas-tomorrow-urgent-announcement-by-the-water-supply-board-1785772341

NO COMMENTS

Exit mobile version