Home இலங்கை பேருந்தை முந்திச் செல்ல முயன்று நேர்ந்த விபரீதம் – கோர விபத்தால் பறிபோன உயிர்கள்!

பேருந்தை முந்திச் செல்ல முயன்று நேர்ந்த விபரீதம் – கோர விபத்தால் பறிபோன உயிர்கள்!

0
image

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இளைஞர்கள் இருவர் லொறியுடன் மோதி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் ரதாவடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் பயணித்த பேருந்தை முந்திச் செல்ல முயன்றதில் எதிரே வந்த லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில்  இளைஞர்கள் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Source: https://samugammedia.com/tragedy-strikes-while-attempting-to-overtake-a-bus–lives-lost-in-a-horrific-accident-1783786345

NO COMMENTS

Exit mobile version