Home இலங்கை போதைப்பொருள்களுடன் நீர்வேலியில் மூவர் கைது

போதைப்பொருள்களுடன் நீர்வேலியில் மூவர் கைது

0
image

யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/three-people-arrested-in-neervely-with-drugs-1785060944

NO COMMENTS

Exit mobile version