Home இலங்கை யாழில் மரத்துடன் மோதி மகிழுந்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்!

யாழில் மரத்துடன் மோதி மகிழுந்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்!

0
image

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று பிற்பகல் 4 மணியளவில் வரணி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மகிழுந்து, வரணி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ஆலமரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் மகிழுந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/accident-in-jaffna-after-hitting-a-tree—three-people-in-the-hospital-1786256926

NO COMMENTS

Exit mobile version