Home இலங்கை ரயிலில் பாய்ந்து இராணுவ சிப்பாய் உயிரிழப்பு; அரியாலையில் துயரம்

ரயிலில் பாய்ந்து இராணுவ சிப்பாய் உயிரிழப்பு; அரியாலையில் துயரம்

0
image

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால்  என்பவரே  இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னர் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாமல் இருந்துள்ளார். 

இன்றையதினம் மீண்டும் கடமைக்கு திரும்பியவேளை பலாலி இராணுவ அதிகாரிகள் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாதமை குறித்து, கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று விளக்கம் கொடுக்குமாறு பணித்துள்ளனர். 

இந்த நிலையில் சிப்பாய் பலாலியில் இருந்து வெளியேறிய நிலையில் அரியாலை நெளுக்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/army-soldier-dies-after-jumping-onto-the-train-sadness-in-ariyalur-1781796285

NO COMMENTS

Exit mobile version