இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 105
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 57 பேர் உயிரிழந்துள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு
இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன என்றும் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பலரைக் கைது செய்துள்ள
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
