Home இலங்கை குற்றம் பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

0

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட முற்றும் அவ்வாறான கும்பல்களுடன் தொடர்பில் இருந்த 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20-45 வயதுக்குட்பட்டவர்களாவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிர்ச்சித் தகவல்கள்

கைது செய்யப்பட்ட பெண்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், துப்பாக்கி கடத்தல், உளவு பார்த்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு உதவி செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்களில் பலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட குற்றவாளிகளுக்கு உதவி செய்து வருவதாக  பொலிஸார் கூறுகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version