Home இலங்கை சமூகம் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து : சாரதிகளுக்கிடையில் கடும் வாக்குவாதம்

இரு அரச பேருந்துகள் மோதி விபத்து : சாரதிகளுக்கிடையில் கடும் வாக்குவாதம்

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை – லுனுவத்த பகுதியில் இன்று (21) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினால் இரு பேருந்துகளின் சாரதிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

காவல்துறையினர் விசாரணை

எனினும் விபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் விபத்தில் இரு பேருந்துகளும் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version