கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட போதே, இந்த 7 பிரதிவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/murder-incident-that-happened-in-2006-death-penalty-for-7-people-1783495518
