2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
திருத்தும் பணிகள்
இந்த நடவடிக்கைகளுக்காக 16,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியிலுள்ள 3663 பரீட்சை நிலையங்களில் 478,182 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/2024-gce-ol-exam-paper-marking-1743487793
