Home இலங்கை குற்றம் யாழில் ஹெரோயினுடன் 22 வயது இளைஞன் கைது!

யாழில் ஹெரோயினுடன் 22 வயது இளைஞன் கைது!

0

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 200 மில்லிகிராம் ஹெரோயின்
போதைப்பொருளுடன் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு
பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

விசேட சுற்றிவளைப்பு 

அதன் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ்
போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version