Home இலங்கை குற்றம் கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

0

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை சய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய பகுதியிலுள்ள 3 சுப்பர் மார்க்கெட் கிளைகளுக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தலா 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதியன்று இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக நுகர்வோர் விவகார ஆணையம் இந்த சோதனைகளை நடத்தியது.

கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 187க்கும் மேற்பட்ட சுப்பர் மார்க்கெட்களில் நுகர்வோர் அதிகார சபை பரிசோதனைகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version