Home இலங்கை குற்றம் பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன்.. நீதிமன்றின் உத்தரவு

பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன்.. நீதிமன்றின் உத்தரவு

0

பலாங்கொடை – தெஹிகஸ்தலாவையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோரும், அவரது தாயாரின் நண்பர் என்று கூறப்படுபவரும் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று பலாங்கொடை நீதிமன்றில் மஜிஸ்திரேட் தேஷ்பந்து சூரியபதாபேதி முன் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு 

சிறுவனின் தாயும் தந்தையும் குழந்தைக்கு பாதுகாப்பை வழங்கத் தவறியதாகவும் அலட்சியமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் தாயின் நண்பர் என கூறப்படும் நபர் பல நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, இறுதி சடங்குகளுக்காக உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version