முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் இதுவரை கிடைக்காத நிலையில்
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்குள் அள்ளுண்டுபோக தமிழ்
மக்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள தமிழர் சம உரிமை இயக்கம், தூய
மாற்றத்துக்காக வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பசு சின்னத்திலும்,
வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டியிடும் தமிழர் சம உரிமை இயக்கம்
விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் வலிகாமம் வடக்கு பிரதேச சபை
உறுப்பினருமான த.நிகேதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை | Politics Of South People Request

மாற்றத்துக்கான தமிழ்த்தேசிய சக்தி

” ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் வழிப்படுத்தலில் மாற்றத்துக்கான தமிழ்த்
தேசிய சக்தியாக தமிழ்த் தேசிய தளத்தில் மக்கள் வாழ்வியலை மேம்படுத்தவே நாம்
களம் கண்டுள்ளோம்.

தூய மாற்றத்துக்கான தமிழ்த் தேசிய களத்தில் தமிழர் சம உரிமை
இயக்கத்தினர் யாழில் பசு சின்னத்திலும் வன்னியில் பூட்டு சின்னத்திலும்
சுயாதீனமாகப் போட்டியிடுகின்றனர்.

தமிழ் மக்கள் போருக்குப் பின்னரான 15 ஆண்டுகளில் தற்போது களத்திலுள்ள அனைத்து
தமிழ்க் கட்சிகளையும் நம்பி களைத்துவிட்டனர்.

நாம் இதுவரை வாக்களித்துத்
தெரிவு செய்தவர்கள் தங்களுக்குள் அடிபடுவதிலும் சுகபோகங்களை அனுபவிப்பதிலும்
அதனைவிட பார்பெர்மிட் பெற்று மக்களைப் போதைக்கு அடிமையாக்கி இளையோரை அழிக்கத்
துணை போகின்றனரே அன்றி மக்களுக்கான எந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை.

தமிழர் தரப்பின் இந்தகக் கையறு நிலையில் தெற்கில் மாற்றத்தை எற்படுத்தியோர்
வடக்கிலும் காலூன்ற முனைகின்றனர்.

தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை | Politics Of South People Request

தமிழர்களுடைய அடிப்படை அபிலாஷை

தமிழர்களுடைய அடிப்படை அபிலாஷைகளைச் சமஷ்டி
முறை இணைந்த வடக்கு – கிழக்கு மாநிலமோ, சம உரிமைகளோ இன்னும் கிடைக்காத
நிலையில், தெற்கின் அலையில் அள்ளுண்டு போக தமிழ் மக்கள் விரும்பவில்லை.

காலத்தின் தேவை கருதி குறுகிய அவகாசம் இருப்பினும் மாற்றத்துக்கான தூய பொது
முகங்களாக சமூகத்தின் சகல தளங்களிலிருந்து தமிழ்த் தேசிய மனிதநேயச்
செயற்பாட்டாளர்களான நிபுணர்களும் பெண்களும் இளையவர்களும் தியாக வேள்வியில்
இளமைக்காலத்தை அரப்பணித்த தமிழ்த் தேசிய போராளிகள் மாற்றுத்திறனாளிகள் என
அனைவருக்கும் நாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம்.

தொகுதிவாரியாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் நிறுத்தப்பட்டுள்ள எமது பொது
முகங்களான முதன்மை வேட்பாளர் கல்வியியலாளர் கலாநிதி தே.தேவானந்த், ஊடகவியலாளர்
ந. பொன்ராசா, சட்டத்தரணி ஜெ. நீலலோஜினி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி முன்னாள்
உப அதிபர் அ.சிவஞானம் உள்ளிட்ட வேட்பாளர் குழாம் யாழில் பசு சின்னத்திலும்,
தமிழ்த் தேசிய போராளி முல்லை ஆனந்தன், முல்லையின் பட்டதாரி இளைஞர் கோகுலன்,
வன்னி மாற்றுத்திறனாளிகள் சங்க வவுனியா உப தலைவர் சாந்தகுமார், தேசிய மீனவர்
ஒத்துழைப்பு சங்க மன்னார் செயலாளர் திருமதி பாமினி உள்ளிட்ட குழாமினர்
வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டிபிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தமிழ்த்
தேசிய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டுகின்றோம்.” என்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.