நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு இன்று (23.02.2025) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனைத் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இதனை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் சமீப காலமாக தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.