2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 17 திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) சமர்பிக்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாணத்தின் கிராம வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது தீரமானிக்கப்பட்டதின் அடிப்படையில் குறித்த தொகை ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த 5000 மில்லியன் மூலம் எட்டு மாதங்களில் திறம்பட கிராம விதிகளை அபிவிருத்தி செய்ய கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட குறித்த நிதி தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துக்கள் முன்வைக்கப்படும் அதே நேரம் தமிழ் அரசியல் தலைமைகளினால் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்த வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் மக்களின் வெளிப்படையான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் கருத்து நிகழ்ச்சி,
YOU MAY LIKE THIS…!
https://www.youtube.com/embed/c9GxSN5epD8https://www.youtube.com/embed/EywylcXLcxw

