இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) கோரிக்கையை ஏற்று தமிழக கடற்றொழிலாளர் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த நான்காம் திகதி இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை வந்த இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடிக்கான (Narendra Modi) உத்தியோகபூர்வ வரவேற்பு விழா கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் (Independence Square in Colombo) இடம்பெற்றது.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள்
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் மோடி கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இலங்கை ஜனாதிபதியின் சந்திப்புக்குப் பின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் மோடி கடற்றொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.