2024 ஆம் ஆண்டில் சாதனை சுற்றுலாப் பயணிகளின் வருகையிலிருந்து உருவான வலுவான உந்துதலைத் தக்க வைத்துக் கொண்டு,ஜனவரி 1 முதல் பெப்ரவரி 27, 2025 வரை மொத்தம் 485,102 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தகவலின்படி ( (Sri Lanka Tourism Development Authority) )இந்தியா(india) 77,381 சுற்றுலாபயணிகளுடன் முன்னணி மூல சந்தையாக முன்னிலை வகித்தது.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குவிந்த நாடுகள்
அதைத் தொடர்ந்து ரஷ்ய கூட்டமைப்பு (63,337) மற்றும் ஐக்கிய இராச்சியம் (46,560) ஆகியவை உள்ளன.
ஏனைய நாடுகளாக ஜேர்மனி (31,770), சீனா (28,028) மற்றும் பிரான்ஸ் (27,682) ஆகியவை அடங்கும்.
பெப்ரவரியில் மட்டும், நாடு 232,341 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது, பெப்ரவரி 22 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் 10,815 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.