தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், “தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுபட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றது. இருந்த போதிலும் எவற்றையும் நிறைவேற்றவில்லை.
குறிப்பாக தமிழ் மக்கள் விடயத்தில் கடந்த அரசாங்கங்கள் செயற்பட்டதை போன்றே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

