முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது.
தமிழ் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு இன்று (17.05.2025) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வந்தாறுமூலை வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வலிந்து காணாமலாகாகப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் என்போர் கலந்துகொண்டிருந்தனர்.
https://www.youtube.com/embed/mPkqjZDT_xg