ஈரான் தலைநகர்தெஹ்ரானில் உள்ள ஈரான் அரசு ஒளிபரப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதன்போது ஒளிபரப்பின் நடுவில் ஸ்டுடியோவிலிருந்து பெண் வாசிப்பாளர் எழுந்து ஓடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
BREAKING: The moment of the attack on IRIB (Iran State Broadcaster) pic.twitter.com/CVU26HHFub
— Faytuks Network (@FaytuksNetwork) June 16, 2025
இரண்டாவது இணைப்பு
மிரட்டும் இஸ்ரேல் இராணுவம் : ஈரான் தலைநகரின் மூன்றாவது மாவட்ட மக்களை உடன் வெளியேற உத்தரவு
கடந்த அரை மணி நேரத்தில், இஸ்ரேலிய இராணுவம் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மூன்றாவது மாவட்டத்திற்கு அவசர வெளியேற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தெஹ்ரான் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மாவட்டம் 3 வடகிழக்கில் அமைந்துள்ளது.
அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்தின்படி, 330,000 க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வசிக்கின்றனர்.
இது மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும், இது நகரத்தின் பரப்பளவில் சுமார் 4.5% ஐ உள்ளடக்கியது.
ஈரானின் அரசு ஒளிபரப்பான இஸ்லாமிய குடியரசு (IRIB) தலைமையகம் இந்த மாவட்டத்தில் உள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரான் தலைநகரிலிருந்து தப்பி ஓடும் மக்கள்…!
இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தேடி ஈரான் தலைநகரத்தை விட்டு வெளியேறும் ஏராளமான தெஹ்ரான் குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் நகரத்தில் உள்ள பிரதான சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு காரணம் பெருமளவிலான மக்கள் வெளியேறுவது அல்ல, மாறாக மோசமான வாகன பராமரிப்புதான் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன நெரிசல் ஏற்பட காரணம்
நேற்று இரவு மற்றும் இன்று காலை குறைபாடுள்ள வாகனங்களை சாலையில் கொண்டு வந்ததால் கார்கள் பழுதடைந்து அதிக வெப்பமடைவதால் போக்குவரத்து நெரிசல்கள், ஏற்படுவதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்தது.
The traffic jams continue for hours now in Tehran.. Not sure why these tweets are stagnant, but it is noteworthy re: the Regime that so many Iranians are fleeing their capital as Israeli jets operate freely overhead in broad daylight. https://t.co/Rr8O8jKLjQ pic.twitter.com/zNmdsB7d5b
— Ron M. (@Jewtastic) June 15, 2025
“போக்குவரத்து காவல்துறையினரின் பலமுறை எச்சரிக்கைகள் மற்றும் தகவல்கள் இருந்தபோதிலும், சில ஓட்டுநர்கள் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ள வாகனங்களுடன் சாலைகளில் நுழைந்துள்ளனர், இது வடக்கு பாதைகளில் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் நீண்ட தாமதங்களுக்கு வழிவகுக்கிறது, ” என்று ஒரு உயர் காவல்துறை அதிகாரி மேற்கோள் காட்டியுள்ளார்.
இதேவேளை ஈரானில் படைத்துறை அலுவலகங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறவேண்டுமென இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

