யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, மாமுனை இணைப்பு வீதி நீண்ட காலமாக
உடைந்து காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில்
செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு வேலைகள் நேற்றைய (18) தினம் ஆரம்பமாகின.
சிரமப்பட்ட மக்கள்
இவ்வீதியில் காணப்படும் பாலத்தின் உடைவால் செம்பியன்பற்று மற்றும் மாமுனை
கிராம மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதோடு முக்கியமாக
பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை பயணத்திலும் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளனர்.

மேலும், செம்பியன்பற்று மாமுனை வழியாக வரும் அரச மற்றும் தனியார் பேருந்துகள்
தமது போக்குவரத்து தடப்பயணத்தில் இந்த பாலத்தினை காரணம் காட்டி தமது
பணியினையும் புறக்கணித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.
மற்றும் கடந்த 2ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், செம்பியன்பற்று மாமுனை மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீதியினையும்
பாலத்தினையும் பார்வையிட்டு இரண்டு கிழமைகளில் இதற்கான புணரமைப்பு வேலைகள்
இடம்பெரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

