முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்கு நிதி வழங்குங்கள்…. இலங்கை அரசிடம் கோரிக்கை

மனிதப் புதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு (Human Rights Commission Of Sri Lanka) பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சட்டத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் எனவும் வேண்டுகோள் அந்த ஆணைக்குழு விடுத்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஐக்கிய நாடுகளின் அமர்வு

”இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்கு நிதி வழங்குங்கள்.... இலங்கை அரசிடம் கோரிக்கை | Finance Technical Support To Excavate Human Graves

இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது.

இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 25 பக்க அறிக்கை முன்வைக்கின்றது.

நபர் ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மனித உரிமையை மிக மோசமாக மீறும் செயல் என்பதை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் ஆயுத மோதல்கள்

பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக தெற்கில் கிளர்ச்சி வடக்கு கிழக்கில் ஆயுத மோதல்கள் குறித்த சூழமைவின் பின்னணியில் காணப்பட்டன.

பல ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதில் குடும்பங்கள், ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் முக்கிய முயற்சிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கீகரிக்கின்றது.

பொருளாதார சவால்கள், பராமரிப்பு பொறுப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டியிருந்த போதிலும் இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடவும் பெண்கள் முயற்சிகளை வழிநடத்தியுள்ளனர் என்பதை இது குறிப்பாக அங்கீகரித்தது.

மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்கு நிதி வழங்குங்கள்.... இலங்கை அரசிடம் கோரிக்கை | Finance Technical Support To Excavate Human Graves

இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மனிதஉரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கடந்த கால விசாரணை ஆணையங்களால் 27,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன என்பதையும் காணாமல் போனோர் தொடர்பான 21,000க்கும் மேற்பட்ட புகார்களை காணாமல்போனோர் அலுவலகம் பெற்றுள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தது.

2029 ஆம் ஆண்டு மே 17 மற்றும் 18 அன்று பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்த பின்னர் 1000க்கும் மேற்பட்ட காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கண்டுபிடிப்புகளையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது.

மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பிரச்சினையை குறிப்பாக எடுத்துக்காட்டியது.

 மனித புதைகுழிகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

வழமையான சட்ட  நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமான பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்கான குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கான பரந்துபட்டஅதிகாரங்களை கொண்ட புதிய நிரந்தர நிறுவனமொன்றை உருவாக்குதல்.

மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்கு நிதி வழங்குங்கள்.... இலங்கை அரசிடம் கோரிக்கை | Finance Technical Support To Excavate Human Graves

ஆட்கொணர்வு வழக்குகள் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றின் விரைவான முடிவை உறுதி செய்வதற்குத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்

வலுக்கட்டாயமாக காணாமல் போதல் சட்டத்தின் கீழ் ‘பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலை ஒரு குறிப்பிட்ட குற்றமாகச் சேர்க்கவும்

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பண, பணமற்ற மற்றும் முன்மாதிரியான சேதங்களுக்கு இழப்பீட்டு வழிகாட்டுதல்களை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் வகுத்தல்.


ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வலுவான விசாரணை இடம்பெறுவதையும் உறுதி செய்வதற்காக மனித புதைகுழிகளில் உள்ள மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமானநிதி உதவி தொழில்நுட்ப உதவி ஏனைய வளங்களை வழங்குங்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் ஒரு தரப்பினராக மாறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இது பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலைமனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக பட்டியலிடுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.