உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய பயிர்ச்செய்கையில் இருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி
கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் குறித்த இரண்டு சாகுபடியில் இருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

