எதிர்வரும் வரவு செலவுத்திட்ட, சட்ட மூலத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.
வரவு செலவுத்திட்டம்
தற்போதைய நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் சட்டமூலம் உள்ளிட்ட இன்னும் சில சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
அதன் பின்னரே வரவு செலவுத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் நாடாளும்னறத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் 03ம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்ட மூலம் முதலாம் வாசிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.