பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்
கந்தர்மடம் பகுதியில் வைத்து கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டுக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தநிலையிலேயே
இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேடப்பட்டு வந்தவர்
இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல்துறைியினரால் தேடப்பட்டு
வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

