இரத்தினபுரி, அயகம பகுதியில் நேற்றிரவு பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 40 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம்
அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி மருத்துவமனையின் பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
