பிரியாமணி
நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை பிரியாமணி.
அப்படத்திற்கு பிறகு மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என பல படங்களில் நடித்திருப்பவர் தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.
நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா உடைத்த ஷாக்கிங் விஷயம்!
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.
சம்பளம்
எந்த விஷயமாக இருந்தாலும் போல்டாக பேசும் பிரியாமணி தற்போது சம்பளம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், பிரபலங்களின் மார்க்கெட் அடிப்படையில் சம்பளம் கேட்பதும், பெறுவதும் தவறில்லை. தகுதியான சம்பளம் கிடைப்பது நியாயம் தானே?. எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் அது என்னை பாதிப்பதில்லை.
என் மதிப்பு என்னவென்று எனக்கு தெளிவாக தெரியும், எனக்கு தகுதியான சம்பளத்தைதான் கேட்பேன், அதிகமாக கேட்க மாட்டேன் என பேசியுள்ளார்.
