Home இலங்கை சமூகம் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – மக்களுக்கு கடும் எச்சரிக்கை

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – மக்களுக்கு கடும் எச்சரிக்கை

0

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.

உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் விமானப்படை எச்சரித்துள்ளது.

பேரிடர் நிவாரணப் பணி

அத்துடன், அனைத்து ட்ரோன் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்கள் பற்றிய தகவல்களை 0112343970, 0112343971 அல்லது 115 அவசர இலக்கத்தின் மூலம் முன்கூட்டியே அறிவிக்குமாறும் இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் தொடர்பாக உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த விசாரணைகளுக்காக இலங்கை விமானப்படையால் உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version