Home இலங்கை குற்றம் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு: இளைஞர் பலி

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு: இளைஞர் பலி

0

கம்பஹா – ஜா-எல, பமுனுகமவில் உள்ள மோர்கன்வத்த கடற்கரையில் 29 வயது இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (21.02.2025)  இடம்பெற்றுள்ளது. 

கொலைக்கான நோக்கம் 

சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் கடவத்தையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலைக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 you may like this video

NO COMMENTS

Exit mobile version