Home இலங்கை குற்றம் மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு! யாழில் வைத்து மேலும் ஒரு சந்தேகநபர் கைது

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு! யாழில் வைத்து மேலும் ஒரு சந்தேகநபர் கைது

0

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்றையதினம்(02.02.2025) யாழ்ப்பாணம்
பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர்
யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் வசித்து வருகின்றார்.

மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேகநபர்

இந்நிலையில், விசேட
அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version