புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் கடந்த 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
இந்தநிலையில், வெற்றிடமாகவுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைய இந்த நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
