Home இலங்கை அரசியல் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

0

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டக் (Volker Türk) , நேற்று (26) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

சந்திப்பு

குறித்த சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

தனது இலங்கை விஜயத்தின் போது நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றமொன்றுக்கான அறிகுறிகளை தான் அவதானித்துள்ளதாகவும், அனைத்து இன மக்களும் நிம்மதி, சந்தோசமாக வாழும் காலமொன்று மலர்ந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version