Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு வழங்கி வைப்பு

0

கிளிநொச்சி – கண்டாவளை, புளியம்பொக்கணை பகுதியில் தற்காலிக வீடொன்றில்
வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கு இன்று (25) இராணுவத்தினரால் நிரந்தர
வீடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை
பகுதியில் சிறு பிள்ளைகளுடன் தற்காலிக வீட்டில் வசித்து வந்த குறித்த
குடும்பத்துக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டுள்ளது. 

கலந்து கொண்டோர் 

இதன்போது, கிளிநொச்சிக்கு இன்று பகல் விஜயம் செய்த இராணுவ தளபதிளயால் இந்த வீடு உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச
செயலாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பதவி நிலை
உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

NO COMMENTS

Exit mobile version