Home இலங்கை குற்றம் பட்டப் பகலில் கடையொன்றை சூறையாடிய காடையர் கும்பல்! எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்

பட்டப் பகலில் கடையொன்றை சூறையாடிய காடையர் கும்பல்! எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்

0

இரும்புக் கம்பிகள், தடிகள் சகிதம் காடையர் கும்பல் ஒன்று எம்பிலிப்பிட்டிய நகரில் பட்டப் பகலில் கடையொன்றைச் சூறையாடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (11) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிப்பிட்டிய நகரின் ஹிங்குரே ஆர விகாரைக்கு சமீபமாகவுள்ள தொலைபேசி திருத்தும் கடையொன்றின் மீதே காடையர் கும்பல் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இதன்போது இரும்புக் கம்பிகள், தடிகள் சகிதம் அராஜகம் செய்த காடையர் கும்பல் கடையின் ஊழியர்களை மட்டுமன்றி அப்பிரதேசத்தில் நடமாடிய பொதுமக்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version