Home அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் படை அதிகாரியால் தாக்கப்பட்ட அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர்!

லொஸ் ஏஞ்சல்ஸில் படை அதிகாரியால் தாக்கப்பட்ட அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர்!

0

லொஸ் ஏஞ்சல்ஸில் செய்தி வெளியிட்டு கொண்டிருந்த அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர் ஒருவர் றப்பர் தோட்டாவால் தாக்கப்பட்டுள்ளார். 

அப்பகுதியில் இடம்பெற்று வரும் கலவரத்தின் போது செய்தி சேகரித்து கொண்டிருந்த காலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த குறித்த பெண் ஊடகவியலாளரை அங்கு களமிறக்கப்பட்டிருந்த படை அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார். 

இச்சம்பவம் பதிவான காணொளி வெளியாகியுள்ள நிலையில், அந்த பெண் காலில் அடிபட்டவுடன் துள்ளிக்குதிப்பதை காணொளியில் காணக்கூடியதாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு 

கலிஃபோர்னியா நகரில் குடியேற்றத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கொள்ளை சம்பவங்கள் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, பிரித்தானிய செய்தி புகைப்படக் கலைஞர் ஒருவரின் காலில் உயிருக்கு ஆபத்தான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக குறித்த நபருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Source: https://tamilwin.com/article/australian-journalist-hit-rubber-bullet-in-la-1749502290

NO COMMENTS

Exit mobile version