Home உலகம் மியான்மர் நிலநடுக்கத்தை துல்லியமாக கணித்த பாபா வங்கா.:அடுத்து நடக்கப்போவது என்ன..!

மியான்மர் நிலநடுக்கத்தை துல்லியமாக கணித்த பாபா வங்கா.:அடுத்து நடக்கப்போவது என்ன..!

0

மார்ச் மாதம் 28ஆம் திகதி மியன்மாரில்(myanmar) மிகப்பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கிட்டதட்ட 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தை பல்கேரிய நாட்டு தீர்க்கதரிசியான பாபா வாங்கா(baba vanga) கணித்துள்ளமை பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் முதல் இங்கிலாந்து இளவரசி டயானா மரணம், கொரோனா உள்ளிட்ட உலகின் முக்கிய நிகழ்வுகளை முன்பே கணித்து உள்ளார். இவர் கூறிய பல விஷயங்கள் இன்று வரை நடந்து வருகின்றன.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் நிகழ இருக்கும் விஷயங்களை கணித்துள்ள நிலையில், அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

2025ல் நடக்கப்போவது என்ன

பேரழிவானது, 2025ல் இருந்து தொடங்கும் என அவர் கணித்துள்ளார்ர். அவற்றின் ஒன்றாக தற்போது மியான்மர் மற்றும் தாய்லாந்து நில நடுக்கங்கள் நிகழ்ந்து இருக்கிறன.

இந்த ஆண்டு இறுதி வரை இயற்கை பேரழிவுகள் இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். மேலும், இந்த ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு மோதல் ஏற்படும் என்றும் அதில் மக்கள் பலர் உயிரிழப்பார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.

அடுத்துவரும் ஆண்டுகள் எப்படி அமையும்

வரும் 2028ஆம் ஆண்டில் மனிதன் சந்திரனுக்கு செல்வான், பசி ஒழியும் என அவரது கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2043ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் இஸ்லாமிய பெரும்பான்மை ஏற்படும், 2066ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை அமெரிக்கா உருவாக்கும். 76ல் சமூகத்தின் சாதி கட்டமைப்பு ஒழியும் என கணிக்கப்பட்டுள்ளது.   

   

NO COMMENTS

Exit mobile version