Home உலகம் அடுத்து நடக்க போகும் சம்பவம்: அதிர்ச்சி கொடுத்த பாபா வங்காவின் கணிப்பு

அடுத்து நடக்க போகும் சம்பவம்: அதிர்ச்சி கொடுத்த பாபா வங்காவின் கணிப்பு

0

20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga) உலகப்புகழ் பெற்றவராவார்.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். அவருக்கு பார்வை பறிபோன பின்னர், எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

அவர் இறப்பதற்கு முன்பு, ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்துள்ளார். பின்னர் அவற்றை குறிப்புகளில் எழுதினார்.

பூமியை தாக்க உள்ள அசுர சூறாவளி

அவரது பல கணிப்புகள் பலித்து உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால் தான் அவரது கணிப்புகள் எப்போதும் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில் பூமியை தாக்க அசுர சூறாவளி ஒன்று தயாராகி வருவதாக பாபா வங்காவின் தீர்க்கதரிசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கடந்த 2023ம் ஆண்டு “அசுர சூறாவளி” ஒன்று பூமியை தாக்கும் என்று தனது தீர்க்கதரிசனத்தை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் அது அப்போது நிகழாமல் போயிருந்தாலும், தற்போது தீவிர விண்வெளி வானிலைகள் அவரது மர்மமான தீர்க்கதரிசனத்திற்கு மீண்டும் உயிரூட்டி உள்ளது.

சூரிய புயல்

அசுர சூறாவளி (Cannibal Storm) என்பது அசாதாரணமான மற்றும் சக்தி வாய்ந்த சூரிய நிகழ்வு (சூரிய புயல்) என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மைய நிபுணர்கள், பாபா வங்காவின் தீர்க்கதரிசனத்துடன் ஒத்து போக கூடிய கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சக்தி வாய்ந்த சூரியப் புயல் ஒன்று பூமியை தாக்க நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அசாதாரண நிகழ்வின் போது, தொழில்நுட்பங்களிடையே சூரிய புயல் தலையிட்டு மிகப்பெரிய தகவல் தொடர்புகள் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகளை சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூரிய புயல் அசாதாரணமான அசுர சூறாவளியாக (Cannibal Storm) மாறும் அபாயம் கொண்டது தான் இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   

NO COMMENTS

Exit mobile version