Home இலங்கை சமூகம் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அதன்படி, செப்டம்பர் 21/22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை கலால் திணைக்கள (Excise Department of Sri Lanka) ஆணையாளர் ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள்

இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் முக்கிய மூன்று போட்டியாளர்களிடையே மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது.

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ( Election Commission) தெரிவித்துள்ளது.

இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Source: https://ibctamil.com/article/bars-will-be-closed-for-president-election-2024-1726303671

NO COMMENTS

Exit mobile version