கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மட்டக்களப்பு – கொழும்பிற்கு இடையிலான தொடருந்து சேவை அட்டவணைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மார்க்கத்திற்கான தொடருந்துகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகள்
விபத்துக்குள்ளாகி வருவதனை தடுக்கும் நோக்கில் கடந்த 7ஆம் திகதி முதல் நேர
மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காட்டு யானைகள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை கூடுதலான நேரம் இந்தப் பயணத்தின் போது காணப்படுகின்ற விடயங்களையும் அதனால் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரனின் கவனத்திற்கு
கொண்டு வரப்பட்டதை அடுத்து மீண்டும்
மட்டக்களப்பு – கொழும்பிற்கு இடையிலான தொடருந்து சேவை அட்டவணைகளில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
இன்று (24.03.2025) முதல் புதிய நேர அட்டவணையின் படி தொடருந்து
பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடருந்து பயண நேரம்
அந்தவகையில் அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி
காலை 09.01மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பிலிருந்து மாலை
03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.38 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.16
மணிக்கு கொழும்பு சென்றடையும்.
இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு
மட்டக்களப்பை வந்தடையும்.
காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும்
உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
காலை 06.05 இற்கு
கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை
வந்தடையும்.
புலதிசி, மீனகயா புகையிரதங்களில்
First class AC (AFC), Third class reserved (TCR)
மாத்திரமே booking செய்து கொள்ள முடியும்.
உதயதேவி புகையிரதத்தில் 2nd class மாத்திரமே booking செய்து கொள்ள
முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.